Join and Earn Money

ஞாயிறு, 20 மார்ச், 2011

டைல்ஸ் பதித்த தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால்

டைல்ஸ் பதித்த தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் சிறிது கோதுமை மாவை எண்ணெய் கொட்டிய இடத்தில் தூவி துடைத்த பிறகு சோப்பு போட்டு துடைத்தால் வழுக்காது. 


ஞாயிறு, 13 மார்ச், 2011

வெற்றிலை -பெண்கள் விருப்பம்


வயிற்று வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா  வெற்றிலையில் உப்பை வைத்து சேர்த்து வாயில் போட்டு  மென்று சாறுடன் முழுங்கினால் வயிற்று வலி விரைவில் குணமாகும் .

கால்சியம் குறைபாட்டுக்கு வெற்றிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

 வெற்றிலை சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் .

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம் 




வெள்ளி, 4 மார்ச், 2011

முருங்கை கீரை


ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கை கீரை யை போட்டு பத்து நிமிடங்கள் வேக விடவும். அதில் தேவையான அளவு உப்பு , மிளகு போட்டு குடித்து வந்தால் தொண்டை தொடர்புடைய சுவாசக் குழல் தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நெல்லிக்காய் ....நெல்லிக்காய் ...நெல்லிக்காய் ...




 இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகரிக்கும் . மேலும் சர்க்கரை  நோய் உள்ளவர்கள் நெல்லிக்காய் சாறு எடுத்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழல்  காய்ச்சலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தலைக்கு தடவி வந்தோமானால் முடி நன்றாக வளர்வதோடு கருமையாகவும்  பளளப்பாகவும் இருக்கும்.  

சனி, 26 பிப்ரவரி, 2011

மிளகு சீரகத்தின் மருத்துவ குணங்கள்


நம்மில் பலருக்கும் இருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் . அது போன்ற சமயங்களில் சூடான பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்து குடித்து வந்தோமானால் இருமல் படிப்படியாக குறைந்து விடும் .


கோடை காலங்களில் நம் உடலில் உஷ்ணம்  அதிகமாக இருக்கும் அதை குறைப்பதற்கு தினமும் கொதி தண்ணீரில் சீரகம் கலந்து குடித்தால் உஷ்ணம் பெருமளவு குறையும் .





வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

முகத்தை பொலிவோடு வைக்க


பெண்களே தினம் உங்கள் முகத்தில் மஞ்சள் பூசி  குளித்து வாருங்கள் . இது உங்கள் முகத்தை பொலிவோடு வைப்பது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் சிறிய முடிகளையும் அகற்றி  விடும் . முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தையும் அகற்றி விடும் .

 மேலும் மஞ்சள் மிகபெரிய கிருமி நாசினி . எனவே உங்கள் சமையலிலும் தொடர்ந்து மஞ்சள் பயன்படுத்தி வாருங்கள்